சென்னையில் சினிமா இயக்குனரின் காதலியின் படங்களை மார்ஃபிங் செய்து மிரட்டிய நபர் கைது

0 1713

சென்னையைச் சேர்ந்த சினிமா இயக்குநரின் காதலிக்கு செல்போன் மூலம் ஆபாச மிரட்டல் விடுத்த திருச்சியைச் சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

புதுமுக இயக்குனராகவும், சினிமா பயிற்சி மையம் ஒன்றையும் நடத்தி வரும் ராம்குமார் என்பவர் தனது காதலியுடன் வசித்து வரும் நிலையில், தனது காதலிக்கு ஏற்கனவே அறிமுகமான திருச்சியைச் சேர்ந்த ஜெயராம் பாண்டியன் என்பவர் பழைய புகைபடங்களை சித்தரித்து அனுப்பி வாட்ச் அப்பில் அனுப்பி தொந்தரவு தருவதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் புகார் அளித்தார்.

இது தொடர்பாக விசாரணை நடத்திய வளசரவாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து திருச்சியில் வைத்து அந்நபரை கைது செய்தனர். அவரது செல்போனில் சினிமா இயக்குனரின் காதலி குறித்த சித்தரித்த படங்கள், ஆபாச மிரட்டல் பதிவுகள் மட்டுமின்றி மேலும் சில பெண்களை இதே பாணியில் மிரட்டி பணம் கேட்டு வந்தது தெரியவந்திருப்பதாகவும் இது குறித்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments