முதலமைச்சர் அலுவலக உயர் அதிகாரி என்று கூறி மும்பை மாடல் அழகியை ஏமாற்றி பலாத்காரம் செய்த நபர் கைது!

0 2035

குஜராத் முதலமைச்சரின் அலுவலக உயர் அதிகாரி என்று போலி நாடகமாடி மும்பை மாடல் அழகியை பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

அரசு வேலை வாங்கித் தருவதாகவும் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி அந்த மாடல் அழகியை ஏமாற்றியதாக வீராஜ் பட்டேல் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வடோதராவில் மாடல் அழகியுடன் திரையரங்கில் படம் பார்க்க போன அவர் அங்கு ஒருவரிடம் தகராறு செய்த போது தன்னை முதலமைச்சர் அலுவலக அதிகாரி என்று கூறி மிரட்டியிருக்கிறார்.

இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்த போது தான் முதலமைச்சர் அலுவலக அதிகாரி என நாடகமாடியதை ஒப்புக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments