சென்னை விவேகானந்தா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்திப்பு!

0 2187

சென்னை மயிலாப்பூர் விவேகானந்தா கல்லூரியில் கடந்த 1973ஆம் ஆண்டில் பி.காம் முடித்த மாணவர்கள் 50 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்து, தங்களது சுகமான நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.

தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கல்லூரி காலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் காட்சிப்படுத்தி இருந்தனர்.

கல்லூரியில் அடிக்கடி ஸ்ட்ரைக் நடத்துவதில் தாங்கள் பெயர் போனவர்கள் என்று கூறிய முன்னாள் மாணவர்கள், தங்களுக்குப் பாடம் எடுத்த பேராசிரியர்களையும் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்து அவர்களிடம் ஆசி பெற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments