திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசத்தில் விழுந்த கல்லூரி மாணவன் பலி

0 3073
திருமண மண்டபத்தில் கொதிக்கும் ரசத்தில் விழுந்த கல்லூரி மாணவன் பலி

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே திருமணக் கூடத்தில் உணவு பரிமாறும் வேலைக்கு சென்ற கல்லூரி மாணவன் கொதிக்கும் ரசத்தில் விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியைச் சேர்ந்த வேணு - கவிதா தம்பதியின் மூத்த மகனான சதீஷ்குமார், தனியார் கல்லூரியில் பயின்றுவரும் நிலையில், தனது கல்வி செலவிற்காக பகுதி நேர வேலைக்கு செல்வது வழக்கம்.

அதன்படி கடந்த 23-ஆம் தேதி மீஞ்சூரில் உள்ள திருமண மண்டபத்திற்கு உணவு பரிமாறும் வேலைக்கு சென்றுள்ளார். சமையல் கூடத்தில் உணவு பாத்திரத்தை இழுத்து செல்லும்போது, பின்னால் இருந்த அண்டாவை கவனிக்காமல் சுடச்சுட இருந்த ரசத்தில் தவறி விழுந்துள்ளார்.

இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்று உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments