வெனிசுலா நாட்டவர்களை தடுத்து நிறுத்திய பெரு... குற்றச்செயல்களில் பலர் ஈடுபடுவதால் அனுமதி மறுப்பு..!

0 1453

பெரு நாட்டுக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற வெனிசுலா நாட்டவர்கள் எல்லையில் தடுத்து விரட்டியடிக்கப்பட்டனர்.

வெனிசுலா நாட்டைச் சேர்ந்த பலர் சிலி நாட்டில் பணியாற்றி வருகின்றனர்.

இவர்கள் தங்கள் நாட்டுக்கு சாலை மார்க்கமாக செல்ல வேண்டும் என்றால், பெரு வழியாக தான் போக வேண்டும். எனவே, தங்களை பெரு நாட்டுக்குள் அனுமதிக்குமாறு கோரி சிலி-பெரு எல்லையில் ஏராளமானோர் திரண்டனர்.

ஆனால், வெனிசுலாவுக்கு செல்லாமல், பெருவிலேயே பலர் தங்கி குற்றச் செயல்களில் ஈடுபடுவதால் அவர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று பெரு நிர்வாகம் கூறி வருகிறது.

இதை மீறி எல்லையில் திரண்டவர்கள், பெரு பாதுகாப்புப் படையினருடன் தகராறில் ஈடுபட்டனர். அவர்கள் போலீசாரால் விடிட்டி அடிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments