உக்ரைனின் பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷ்ய படைகள் தாக்குதல்..!

0 1613

உக்ரைனின் பல்வேறு நகரங்களில் நள்ளிரவில் ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியானதோடு, பலர் காயமடைந்தனர்.

மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகி வரும் நிலையில், நள்ளிரவு நேரத்தில், கீவ், உமன், டினிப்ரோ உட்பட பல நகரங்களில் ஏவுகணைகளை ஏவி தாக்குதல் ரஷ்யா நடத்தியுள்ளது.

இதில் உமனில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று தீப்பற்றியதில் 6 பேர் பலியாகினர்.

டினிப்ரோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு குழந்தையும் இளம்பெண்ணும் உயிரிழந்தனர். இதனிடையே, தலைநகர் கீவ்-வில் நள்ளிரவு முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலித்ததால் மக்கள் அச்சமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments