கழிவறை நீரில் காபி -சிறைவாழ்க்கை குறித்து நடிகை கிறிஸன் பெரரியா உருக்கம்

0 3557

கழிவறை நீரை எடுத்து காபி போட்டுத் தந்தனர் என்று ஷார்ஜாவில் அனுபவித்த சிறை வாழ்க்கை குறித்து பாலிவுட் நடிகை கிறிஸன் பெரரியா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட பெரிரியா கடந்த ஏப்ரல் முதல் தேதியில் இருந்து ஷார்ஜாவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்,ஆயினும் அவர் போதைப் பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. போதைப் பொருள் கடத்திய கும்பல் சிக்கியதை அடுத்து 26 நாட்கள் கழித்து பெரிரியா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

விரைவில் இந்தியா திரும்ப உள்ள அவர் வீடியோ கால் மூலமாக தமது குடும்பத்தினருடன் கண்ணீர் விட்டு அழுதபடி உரையாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments