சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் இன்று தமிழகம் திரும்பினர்

0 1668
சூடானில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் இன்று தமிழகம் திரும்பினர்

உள்நாட்டு போர் நடைபெறும் சூடான் நாட்டில் இருந்து மீட்கப்பட்ட 9 தமிழர்கள் இன்று தமிழகம் திரும்பினர்.

சூடான் நாட்டில் ஆட்சியை கைப்பற்றுவது தொடர்பாக அந்நாட்டு ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினர் இடையே தீவிர சண்டை நடைபெறுகிறது. அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை, ஆப்ரேசன் காவிரி எனும் திட்டத்தின்கீழ் நாட்டுக்கு மீண்டும் திரும்ப அழைத்து வரும் பணியை இந்தியா தொடங்கியுள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்டோர் அந்நாட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

இதில் முதற்கட்டமாக 360 பேர் சவுதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானப்படை விமானம் மூலம் டெல்லிக்கு அழைத்துவரப்பட்டனர். அவர்களில் சென்னையை சேர்ந்த 5 பேர் இன்று காலை விமானம் மூலம் மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தடைந்தனர். இதேபோல் மேலும் 4 பேர் மதுரை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை விமான நிலையங்களில் உறவினர்கள் கண்ணீர்மல்க வரவேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments