சிம்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் தீ விபத்து... புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் சேதம்

0 1255

ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் உள்ள அரசு மருத்துவமனையில் இன்று காலை நேரிட்ட தீ விபத்தில் புறநோயாளிகள் பிரிவு முற்றிலும் சேதமடைந்தது.

இந்திரா காந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் புறநோயாளிகளுக்காக புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இங்கு மேல்தளத்தில் திடீரென பற்றிய தீ, மளமளவென வேகமாக பிற பகுதிகளுக்கும் பரவியது.

உடனடியாக அருகருகே வார்டுகளில் இருந்த நோயாளிகள் அனைவரும் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். தீ விபத்தில் உயிரிழப்போ, அல்லது யாரும் காயமடையவோ இல்லை என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments