எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடாத அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினம் என பாகிஸ்தானுக்கு மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம்

0 951

எல்லைத் தாண்டிய தீவிரவாதத்தை கைவிடாத அண்டை நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்துவது மிகவும் கடினமானது என்று பாகிஸ்தானுக்கு மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அடுத்த வாரம் டெல்லியில் நடைபெற உள்ள ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பங்கேற்க உள்ளார்.

ஆனால் பாகிஸ்தான் அமைச்சருடன் ஜெய்சங்கர் நேரடிப் பேச்சு வார்த்தை நடத்த வாய்ப்பில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 5 ராணுவ வீரர்கள் உயிரிழந்த நிலையில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட இந்தியா மறுத்துவிட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments