ஊட்டி அருகே 14 வயது மாணவியை பலாத்காரம் செய்து கொன்ற உறவினர் காவல் நிலையத்தில் சரண்..!

0 2782

ஊட்டி அருகே 14 வயது மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி, கொலை செய்து காட்டில் வீசியதாக தேடப்பட்டு வந்த மாணவியின் உறவினர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

சூட்டிங்மட்டம் அருகில் தவிட்டுகோடு மந்து பகுதியில் மாணவி சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக 3 தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

விசாரணையில், பள்ளி முடிந்து வீட்டிற்குச் செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்திருந்த மாணவியை அவரது உறவினர் ரஜ்னேஷ் குட்டன் வீட்டில் விடுவதாகக் கூறி காரில் அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்தது தெரிய வந்தது.

தலைமறைவாக இருந்து வந்த ரஜ்னேஷ் குட்டன் பைக்காரா காவல் நிலையத்தில் இன்று சரணடைந்தார்.

ஏற்கனவே திருமணமான அவர், சம்பவத்தன்று மதுபோதையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments