ராபிடோ ஓட்டுநர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி சாலையில் குதித்த பெண்.. சிசிடிவி காட்சிகள் வெளியீடு

0 2492

பெங்களூரில் பெண் பயணிக்கு ராபிடோ ஒட்டுநர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறி பைக்கில் இருந்து அந்த பெண் சாலையில் குதித்த சிசிடிவி காட்சிகளை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

21 ஆம் தேதி இந்திராநகர் பகுதிக்கு செல்வதற்காக பெண் ஒருவர் ராபிடோ செயலியை பயன்படுத்தினார். அங்கு வந்த ஓட்டுநர், பெண்ணை ஏற்றி கொண்டு சென்றபோது, பாலியல் தொல்லை அளித்ததாகவும், ஓடிபி பார்ப்பதாக கூறி செல்போனை பறித்ததுடன் தவறான பாதையில் வாகனத்தை செலுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், திடீரென சாலையில் குதித்து, கீழே விழுந்த நிலையில், மீண்டு எழுந்து ஓடி தப்பினார்.

இது தொடர்பான புகாரில்  தீபக் என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments