வாகன சோதனையின்போது காரில் எடுத்து வரப்பட்ட நாட்டுத் துப்பாக்கி, தோட்டா பறிமுதல்!

0 999

திருவிடைமருதூர் அருகே, வாகன சோதனையின்போது நாட்டுத் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் காரில் வந்த மூன்று பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கும்பகோணம் மயிலாடுதுறை சாலையில் போலீசார் அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

காரில் நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்ததையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்த பாலகுரு, எட்வின் லியோ மற்றும் அப்துல்காதர் ஆகியோரை காவல் நிலையம் அழைத்து சென்ற போலீசார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் அனுமதி பெற்று வாங்கி வரப்பட்டவையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments