விமான நிலையத் தாக்குதலை நடத்திய ஐ.எஸ்.ஐ.எஸ் தலைவர் சுட்டுக் கொலை - அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில்

0 1248

காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு திட்டம் வகுத்த ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர் ஒருவரை தாலிபன் அரசு சுட்டுக் கொன்றதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் அறிவித்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஆப்கான் தலைநகரான காபூலில்  விமான நிலையம் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இதில் 13 அமெரிக்கர்கள் உட்பட 183 பேர் உயிரிழந்தனர்.

இதில் தொடர்புடைய ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத தலைவர் கொல்லப்பட்டதில், தாலிபன் ராணுவமே நேரடியாக ஈடுபட்டது என்றும் அமெரிக்கா அதில் ஈடுபடவில்லை என்றும் ஜோபைடன் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments