மும்பையில் போதைப் பொருள் கடத்தலுக்கு நடிகையைப் பயன்படுத்தியதாக 2 பேர் கைது..!

0 1256

போதைப் பொருள் கடத்தலுக்கு நடிகையைப் பயன்படுத்தியதாக இரண்டு பேரை மும்பை போதைத் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.

ஆன்டனி பால் மற்றும் ராஜேஷ் தாமோதர் ஆகிய இருவரும் நடிகை கிறிஸ்ஸன் பெரிராவை சந்தித்து ஒரு நினைவுப் பரிசை ஷார்ஜாவில் உள்ள ஒருவரிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டனர்.

அந்த நினைவுப் பரிசுக்குள் போதைப் பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதனை ஷார்ஜாவில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்ததையடுத்து நடிகை கைது செய்யப்பட்டு ஷார்ஜாவில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் நடிகையை போதைப் பொருள் கடத்தலில் சிக்க வைத்த இருவரை மும்பை போலீசார் கைது செய்தனர்.

நடிகை கிறிஸ்ஸனின் வீட்டில் வளர்த்த நாய் தன்னைப் பார்த்து குரைத்ததால் அதனை அடிக்க முயன்ற போது, நடிகையின் தாயார் பலர் முன்னிலையில் தன்னைஅடித்ததால், அதற்குப் பழிவாங்கும் விதமாக இவ்வாறு செய்ததாக ஆன்டனி பால் தெரிவித்துள்ளான். ஹாலிவுட் வெப்தொடரில் நடிக்க ஆடிசன் இருப்பதாக கூறி நடிகையை ஏமாற்றி அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments