பாகிஸ்தானில் காவல்நிலையத்தில் தற்கொலைப்படை தாக்குதல்.. 8 போலீசார் உட்பட 10 பேர் பலி..!

0 1262

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள காவல்நிலையத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 8 போலீசார் உட்பட 10 பேர் உயிரிழந்தனர்.

கபால் நகரில் உள்ள காவல்நிலைய வளாகத்தில் பயங்கரவாத தடுப்புத்துறை அலுவலகமும், மசூதி ஒன்றும் செயல்பட்டு வரும் நிலையில், திங்கட்கிழமையன்று அங்கு 2 முறை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.

இதில் கட்டடம் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தை அடுத்து அம்மாகாணம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments