காதலிக்க மறுத்த பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்து கொல்ல முயன்ற கொடூரன்.. ஒரு தலைக்காதல் விபரீதம்...!

0 1567

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் காதலிக்க மறுத்த பெண்ணை நடுரோட்டில் கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்ய முயற்சித்த இளைஞரை பொதுமக்கள் பிடித்து போலீசிடம் ஒப்படைத்தனர்.

ஆர்.எஸ். நகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் என்ற இளைஞர், ஒருதலையாக ஒரு பெண்ணை காதலித்து வந்த நிலையில், அந்தப் பெண் மறுப்புத் தெரிவித்தும் விடாமல் அவரை பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று மாலை அந்தப் பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தபோது, அவரை இடைமறித்த சுரேஷ், மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.

அப்பகுதியில் இருந்த பொதுமக்கள் சுரேஷை தடுத்து நிறுத்தி, அவரை பிடித்து போலீசிடம் ஒப்படைத்த நிலையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. கழுத்தில் காயம் அடைந்த பெண் மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments