ஓசி பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்திய போதை ஆசாமிகள்...

0 1486

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே போதை ஆசாமிகள்  இலவசமாக பெட்ரோல் கேட்டு பங்க் ஊழியர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தும் சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

வந்தவாசி அடுத்த கீழ்கொடுங்காலூர் கூட்டுச்சாலை அருகே ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது.இங்கு நேற்று இரண்டு இரு சக்கர வாகனத்தில் குடி போதையில் வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல்,  ஓசியில் பெட்ரோல் போடச் சொல்லி மிரட்டியுள்ளது.

இதற்கு மறுப்பு தெரிவித்த ஊழியர்களை போதை ஆசாமிகள் வெறித்தனமாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளனர்.இது குறித்த புகாரின் பேரில்  சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் போதை ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments