திருமணம் உள்ளிட்ட தனியார் நிகழ்ச்சிகளிலும் மதுவிற்கு அரசு அனுமதி வழங்காது - அமைச்சர் செந்தில் பாலாஜி

0 2382

கல்யாண மண்டபத்திலும், விளையாட்டுத் திடல்களிலும், மது அருந்த அரசு அனுமதித்திருப்பதாகக் கூறி, கண்டனம் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிசாமி, இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைத்து கலாச்சாரத்தின் மீது திராவகம் வீசப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், இத்தகைய செயல்கள், பொது அமைதியை சீர்குலைத்து குற்றச் செயல்களை அதிகரிக்கும் என கூறியுள்ளார்.

இதனிடையே, திருமணம் உள்ளிட்ட எந்தவொரு தனியார் நிகழ்ச்சிகளிலும் மதுபானங்களுக்கு அரசு அனுமதி வழங்காது என்றும், ஐபிஎல் போன்ற சர்வதேச நிகழ்வுகளில் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கமளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments