தெலங்கானா போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட ஒய்.எஸ்.ஷர்மிளா

0 1901

ஐதராபாத்தில் வீட்டுக்காவலில் சிறை வைக்க முயன்ற போலீசாருடன் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சியின் தலைவர் ஒய்எஸ் ஷர்மிளா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

மாநில அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வரும் ஷர்மிளா, புலனாய்வு குழுவினரின் விசாரணைக்கு ஆஜராக உள்ளதாக தகவல் வெளியானது.

அவர் விசாரணைக்குச் செல்வதைத் தடுக்கும் வகையில் வீட்டுக் காவலில் சிறை வைக்க முயன்ற போலீசார், ஷர்மிளாவின் கார் ஓட்டுநரை கீழே இறக்கினார்கள். இதனையடுத்து, போலீசாருடன் ஷர்மிளா தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட வீடியோ பதிவு வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments