அம்ரித்பால் கைது செய்யப்பட்டது குறித்து ஐஜி சுக்செயின் சிங் விளக்கம்..!

0 1811

காலிஸ்தான் பிரிவினைவாத ஆதரவாளரும், வாரிஸ் தே பஞ்சாப் இயக்கத்தலைவர் அம்ரித்பால் சிங் சுற்றி வளைக்கப்பட்டு கைது செய்யப்பட்டதாகவும், அவர் சரணடையவில்லை எனவும் பஞ்சாப் காவல் துறை தலைமையக ஐஜி சுக்செயின் சிங் கில் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், 36 நாட்கள் தேடுதலுக்கு பின், மோகாவின் Rode கிராமத்தில் உள்ள குருத்வாராவில் காலை சுமார் 7 மணியளவில், அம்ரித்பால் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.  அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்ததால் தப்ப முடியாத சூழலில், வேறு வழியின்றி வெளியே வந்த அம்ரித்பால் கைது செய்யப்பட்டதாகவும் கூறினார். 

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதான அம்ரித்பால் சிங், பதிண்டா விமானப்படை தளத்திலிருந்து வீரர்கள் பாதுகாப்புடன், அசாமின் திப்ருகரில் உள்ள சிறைக்கு கொண்டு செல்லபட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments