கூடைப்பந்து விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென சரிந்து விழுந்த நபர் உயிரிழப்பு..!

0 1573

நீலகிரி மாவட்டம் உதகையில் 50 வயதுக்குட்பட்டோருக்கான கூடைப்பந்து போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த ஒருவர், மாரடைப்பு ஏற்பட்டு  சுருண்டு விழுந்து இறந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

உதகை எச்.ஏ.டி.பி., உள்விளையாட்டு அரங்கில் மாநில அளவில் மூத்தோருக்கான கூடைப்பந்து போட்டி நடைபெற்று வருகிறது.  நேற்று மதுரை-கோவை அணிகள் மோதிய போட்டியில், மதுரையைச் சேர்ந்த  நேரு ராஜன் என்பவர் விளையாடிக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென சுருண்டு விழுந்து அவர் உயிரிழந்தார். மருத்துவர்களின் பரிசோதனையில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments