காலையிலேயே திறக்கப்பட்ட மதுபான பார்.. மது அருந்திய 20 பேரை பாரின் உள்ளே வைத்து பூட்டிய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர்

0 7383

சேலத்தில் விதிகளுக்கு புறம்பாக காலையிலேயே திறக்கப்பட்ட மதுபான பாரில், மது அருந்திக் கொண்டிருந்தவர்களுடன் உள்ளே வைத்து பூட்டி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

டவுன் பேருந்து நிலையம் அருகே தாதுபாய் குட்டைப்பகுதியில் தொடர்ந்து விதிகளுக்கு புறம்பாக காலையிலேயே மதுபான பார் திறக்கப்படுவதாக குற்றம்சாட்டிய போராட்டக்காரர்கள், இன்று பூட்டு போட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவார்த்தை நடத்தி, மதுபான பாருக்குள் இருந்தவர்களை வெளியேற்ற, அவர்கள் முகத்தை மூடிக் கொண்டு சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments