மாணவிகளிடம் பாலியல் சீண்டல்.. அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது..!

0 2733

தண்டாரம்பட்டு அருகே பள்ளி மாணவிகள் பலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசுப்பள்ளி ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

டி.கல்லேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 5ஆம் வகுப்பு ஆசிரியராக பணியாற்றும் லட்சுமணன் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதாக மாணவிகள் பெற்றோர்களிடம் தெரிவித்ததையடுத்து, மாவட்ட குழந்தை பாதுகாப்பு நல அலுவலரிடம் பெற்றோர்கள் புகார் அளித்தனர்.

இதனைத்தொடர்ந்து, தண்டாரம்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் குழந்தை பாதுகாப்பு நல அலுவலர் புகார் அளித்ததையடுத்து, மகளிர் போலீசார் மாணவிகளின் வீடுகளுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், லட்சுமணன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்ததையடுத்து அவர் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments