மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டி, வேன் டிரைவரை கல்லால் தாக்கி கொலை செய்த இரண்டு பேர் கைது

0 1922

காஞ்சிபுரத்தில் மதுபோதையில் பணம் கேட்டு மிரட்டி, வேன் டிரைவரை தலையில் கல்லால் தாக்கி கொலை செய்ததாக, கூலித் தொழிலாளிகள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரங்கசாமி குளம் பகுதியில் இன்று காலை வேன் டிரைவரான அயூப்கான், தலையில் படுகாயத்துடன் சடலமாகக் கிடந்தார். தகவல் அறிந்து வந்த போலீசார், சிசிடிவி பதிவுகளின் அடிப்படையில், அப்பகுதியில் சுற்றித்திரிந்த பிரதீப்குமார், வினோத்குமார் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

நள்ளிரவில் அங்கே மது அருந்திக் கொண்டிருந்த அயூப்கானிடம், ஏற்கனவே குடிபோதையில் இருந்த இருவரும் பணம் கேட்டு மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில், அவரை உதைத்து கீழே தள்ளி, கல்லால் தலையில் தாக்கியதாக போலீசாரிடம் அவர்கள் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments