வயதானவர்களை குறிவைத்து கொலை.. சிக்கிய குற்றவாளிகள்..!

0 1394

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே மூன்று ஆண்டுக்கு முன்பு 85 வயது மூதாட்டி கொல்லப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், பழைய குற்றவாளிகள் இரண்டு பேர் சிக்கியுள்ளனர்.

மருங்கூர் என்ற கிராமத்தில் தனியாக வசித்து வந்த பவுனம்மாள் என்ற அவர், 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்டு, அவர் அணிந்திருந்த 3 சவரன் நகை கொள்ளையடிக்கப் பட்டது. இவ்வழக்கு கடந்த 3 ஆண்டுகளாக துப்பு துலங்காமல் இருந்த நிலையில், எஸ்பி ராஜாராம் உத்தரவின் பேரில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

கொலை நடந்த அன்று, சம்பவ இடத்தில் பதிவான செல்போன் சிக்னல்களையும், இதே பாணியில் ஏற்கனவே நடந்த குற்றங்களையும் ஒப்பிட்டு விசாரித்ததில், விஸ்வநாதன், வேலாயுதம் என்ற இருவர் சிக்கினர்.
அவர்கள் விழுப்புரம் மற்றும் கடலூர் மாவட்டங்களில் தனியாக வசிக்கும் வயதானவர்களை குறிவைத்து கொள்ளையடிப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்ததும், ஏற்கனவே கைதாகி சிறைக்கு சென்றதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments