சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது கூண்டில் இருந்து தப்பித்த சிங்கங்கள்.. பீதியடைந்த பார்வையாளர்கள்

0 1964
சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது 2 சிங்கங்கள் கூண்டில் இருந்து தப்பித்து வெளியேறியதால் பார்வையாளர்கள் அச்சமடைந்தனர்.

சீனாவில் சர்க்கஸ் நிகழ்ச்சியின் போது 2 சிங்கங்கள் கூண்டில் இருந்து தப்பித்து வெளியேறியதால் பார்வையாளர்கள் அச்சமடைந்தனர்.

கடந்த வாரம் லுயோயாங்கில் உள்ள சர்க்கஸில் சிங்கங்களை கூண்டுக்குள் அடைத்து, சாகசங்கள் அரங்கேற்றப்பட்டது. அச்சமயம் எதிர்பாராத விதமாக 2 சிங்கங்களும், முறையாக பூட்டப்படாமல் இருந்த சிறிய கதவு வழியாக கூண்டில் இருந்து வெளியேறியதால், பீதியடைந்த பார்வையாளர்கள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.

சர்க்கஸ் கூடாரத்தில் இருந்து வெளியேறி உலவிக் கொண்டிருந்த சிங்கங்களை பராமரிப்பாளர்கள் பிடித்து கூண்டுக்குள் அடைத்தனர். இதில் எந்த அசம்பாவிதமும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments