அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரித்தது இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம்..!

0 3591

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமைத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது.

இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி என குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.

அதில் அதிமுக விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம், டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் ஆகியவை பிறப்பித்த தீர்ப்புகள் சுட்டிகாட்டப்பட்டிருப்பதோடு, கடந்த மாதம் 28, இம்மாதம் 13ம் தேதிகளில் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதங்களில் தெரிவிக்கப்பட்டபடி, கட்சி விதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள், பதவி மாற்றம் உள்ளிட்டவை ஏற்றுக் கொள்ளப்படுவதாகவும், ஆனால் இந்த முடிவானது நீதிமன்ற தீர்ப்பு மற்றும் உத்தரவுகளுக்கு கட்டுப்பட்டது என்றும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல், கர்நாடக மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் அதிமுகவினருக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கும்படி உத்தரவிட்டுள்ளது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments