சென்னை ஆலந்தூரில் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்ற 16 வயது சிறுவன் விபத்தில் பலி..

0 2863
சென்னை ஆலந்தூரில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற 16 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

சென்னை ஆலந்தூரில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற 16 வயது சிறுவன் விபத்தில் சிக்கி உயிரிழந்தார்.

ஆலந்தூரைச் சேர்ந்த 11ம் வகுப்பு மாணவன் முகமது ராயன் நேற்று தொழுகையை முடித்துவிட்டு தன்னுடன் பயிலும் மாணவருடன், தனது பல்சர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

ஆலந்தூர் சுரங்கப்பாதை அருகே அதிவேகமாக திரும்பியதாக கூறப்படும் நிலையில், நடைபாதை ஓரத்தில் இருந்த கற்கள் மீது பைக் ஏறியதில் இருவரும் கீழே விழுந்துள்ளனர்.

விழுந்த வேகத்தில் மெட்ரோ ரயில் தூணில் மோதியதில் தலைகவசம் அணியாததால் படுகாயமடைந்து முகமது ராயன் உயிரிழந்தார்.

பின்னால் அமர்ந்து வந்த மற்றொரு சிறுவனுக்கு இரு கைகளும் முறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை சுட்டிக்காட்டி 18 வயதிற்குட்பட்டோர் வாகனத்தை ஓட்ட அனுமதித்தால் மோட்டார் வாகன சட்டப்படி வாகன உரிமையாளர் மற்றும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை எச்சரித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments