தேர்தல் டெபாசிட் தொகை 10 ஆயிரம் ரூபாயை ஒரு ரூபாய் நாணயங்களாக செலுத்திய நபர்

0 1511

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் சுயேட்சையாக மனுத் தாக்கல் செய்த நபர், டெபாசிட் தொகையான 10 ஆயிரம் ரூபாயை ஒரு ரூபாய் நாணயங்களாக செலுத்தியுள்ளார்.

கர்நாடகத்தின் யாத்கிர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட யன்கப்பா என்ற நபர் வேட்புமனு தாக்கல் செய்ய ஒரு ரூபாய் நாணயங்களாக கொண்டு சென்றார்.

அவற்றை அதிகாரிகள் பொறுமையுடன் எண்ணி பெற்று கொண்டனர். இதனிடையே, தனது தொகுதி மக்களிடம் இருந்தே ஒரு ரூபாய் நாணயங்களை வசூல் செய்து அந்த பணத்தில் டெபாசிட்  செலுத்தியதாக யன்கப்பா தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments