சென்னையில் நள்ளிரவில் அதிவேகமாக பைக்கை ஓட்டிச் சென்ற இளைஞர் உயிரிழப்பு - மற்றொருவர் படுகாயம்

0 2767

சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸில் ஈடுபட்ட இளைஞர்களை போலீசார் துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன. அண்ணாசாலை மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபடப்போவதாக வந்த தகவலையடுத்து போலீசார் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சிலர் விலை உயர்ந்த வாகனங்களில் அதி வேகமாக, பொது மக்களுக்கு இடையூறு செய்தபடி வந்ததாகக்கூறப்படுகிறது.

அவர்களை தடுத்து நிறுத்த போலீசார் முற்பட்ட போது, சிலர் தப்பிக்க முயற்சித்த நிலையில், போலீசார் சாலையில் ஓடியபடி அவர்களை துரத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஆலந்தூர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர்களில் ஒருவர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த மற்றொரு இளைஞருக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments