பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டிய நபரை கைது செய்த சைபர் கிரைம் போலீஸார்!

0 1945

புதுச்சேரியில் ஹேக்கர், சைபர் பிரிவு என்று சொல்லி பெண்களின் புகைப்படங்களை மார்பிங் செய்து மிரட்டிய நபரை சைபர் கிரைம் போலீஸார் கைது செய்தனர்.

புதுச்சேரியைச் சேர்ந்த கல்லூரி மாணவிக்கு ஒரு இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் இருந்து மிரட்டல் சம்பவங்கள் வந்த வண்ணம் இருந்தன. இதனால் பயந்து போன மாணவி புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு பிரபாகரன் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை சோதனை செய்த போது நிறைய பெண்களை மிரட்டி இருப்பதும் தெரியவந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments