விழுப்புரம்: தாத்தா பாட்டி கழுத்து நெரித்துக் கொலை - பேரன் கைது

0 2245

விழுப்புரம் அருகே தாத்தா பாட்டியை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக அவர்களின் பேரனை போலீசார் கைது செய்துள்ளனர்.

பில்லூரைச் சேர்ந்த கலுவு-மணி என்ற வயதான தம்பதியினர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், சந்தேக வழக்காக பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வந்தனர். உடல் உடற்கூராய்வில் இருவரும் கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது தெரியவந்ததையடுத்து, தலைமறைவாக இருந்த அவர்களது பேரன் அருள்சக்தியை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

இதில் தாத்தா பாட்டிக்கு சொந்தமான வீடு, இடத்தை தனது பெயருக்கு எழுதி தர மறுத்ததால் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்து  போலீசார் சிறையில் அடைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments