2வது பிரசவத்துக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்.. அனுமதியின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டதாக புகார்..!

0 1985

மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்ணுக்கு , அனுமதியின்றி குடும்பக்கட்டுப்பாடு செய்யப்பட்டதாக உறவினர் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.

மேலூர் முகம்மதியாபுரம் பகுதியைச் சேர்ந்த ஆஷிகா பாணு என்ற பெண் பிரசவத்திற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுவை சிகிச்சை மூலமாக பெண் குழந்தை பிறந்த நிலையில், உறவினர்களிடம் தெரிவிக்காமல் குடும்பக்கட்டுப்பாடு சிகிச்சையும் அப்போதே செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக உறவினர்கள் புகார் அளித்த நிலையில் ஆஷிகா பானுவுக்கு முதல் மற்றும் 2வது குழந்தையும் அறுவை சிகிச்சை மூலமே பிறந்ததாகவும், அவரது கருக்குழாயில் நீர்க்கோர்த்து இருந்ததால், உடனடியாக குடும்பக்கட்டுப்பாடு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் மருத்துவமனை டீன் ரத்தினவேல் விளக்கமளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments