விழுப்புரம் அருகே வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட வயதான தம்பதி.. குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொலையா? என போலீசார் விசாரணை

0 2929

விழுப்புரம் அருகே வயதான தம்பதி வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில் குளிர்பானத்தில் விஷம் வைத்து கொல்லப்பட்டனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பில்லூர் கிராமத்தை சேர்ந்த முடிதிருத்தும் தொழிலாளியான கலுவு மற்றும் அவரது மனைவி மணி தனியாக வசித்து வந்தனர்.

இவர்களது வீட்டின் கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்து அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தபோது வயதான தம்பதி சடலமாக கிடந்தது தெரியவந்தது. 

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் உடல்களை கைப்பற்றி விழுப்புரம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.  முதற்கட்ட விசாரணையில் வயதான தம்பதியிடம் கடலூரில் இருந்து வந்திருந்த அவர்களது பேரன் அருள்சக்தி பணம் கேட்டு சண்டையிட்டதாகவும், பணம் தர மறுத்ததால் தாத்தா - பாட்டிக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். 

தலைமறைவான அருள்சக்தியை பிடிக்க, தனிப்படை அமைத்து, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments