சென்னையில் அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி மனைவியுடன் காவலாளி மரணம்.. போலீசார் விசாரணை!

0 3644

சென்னை வானகரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் கர்ப்பிணி மனைவியுடன் காவலாளி உயிரிழந்து கிடந்தது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சம்பவம் நடந்த அடுக்குமாடி குடிருயிருப்பில் காவலாளியாக வேலை பார்த்து வந்த 24 வயதான பிரேம், 18 வயதான தனது மனைவி கமலாவுடன் காவலாளிக்கென ஒதுக்கப்பட்ட அறையில் வசித்து வந்தனர்.

கமலா 3 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில், அறையில் வாயில் நுரையுடன் உயிரிழந்து கிடந்துள்ளார். அதே அறையில் காவலாளி பிரேம் தூக்கிட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

குடியிருப்புவாசிகள் கொடுத்த தகவலின் படி உடலை கைப்பற்றிய மதுரவாயல் போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments