முன்பகையால் வீடு புகுந்து தாய், மகனை கத்தியால் குத்திய கும்பல்

0 2356

சென்னையில் முன்பகை காரணமாக வீடு புகுந்து தாய் மகனை கத்தியால் குத்திய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவான்மியூர் பெரியார் நகரில் வசிப்பவர் ஹரி விக்னேஷ். இவர் வசித்து வரும் வீட்டுக்கு எதிரில் உள்ள சரண்ராஜ் குடும்பத்தினருடன் ஏற்பட்ட தகராறில், சரண்ராஜ் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

அப்போது காவல்நிலையம் வந்த சரண்ராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் காவலர்கள் முன்னிலையே ஹரி விக்னேஷிடம் தகராறு செய்து தாக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மீண்டும் விக்னேஷ் வீட்டுக்கு கூட்டாளிகளுடன் சென்ற சரண்ராஜ், கத்தியால் குத்தி காயப்படுத்தியதுடன் தடுக்க வந்த விக்னேசின் தாயாரின் கையையும் வெட்டியுள்ளார்.

காயமடைந்த தாயும் மகனும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காவல்துறையில் புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காவல் ஆய்வாளரை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments