துபாயின் அல்-ராஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: 16 பேர் உயிரிழப்பு..!

0 1778

ஐக்கிய அரபு அமீரகத்திலுள்ள துபாயின் அல்-ராஸ் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கேரள தம்பதியினர் உள்பட 4 இந்தியர்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.

கட்டிடத்தின் நான்காவது மாடியில் பற்றிய தீ மற்ற பகுதிகளுக்கும் பரவத் துவங்கியதைத் தொடர்ந்து போர்ட் சயீத், ஹம்ரியா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து தீயை கட்டுப்படுத்தினர்.

மற்ற தளங்களில் இருந்தவர்கள் வெளியேற்றப்பட்டதோடு, தீ விபத்தில் பலத்த காயமடைந்த 9 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments