சூடானில் ராணுவம் - துணை ராணுவத்திற்கு இடையே கடும் சண்டை: துப்பாக்கித் தோட்டா பாய்ந்து இந்தியர் பலி..!

0 1353

சூடானில், ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில், இந்தியர் ஒருவர் உயிரிழந்ததாக சூடானுக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

கார்டோமில் இரு படைகளுக்கும் இடையே சண்டை தீவிரமடைந்துள்ள நிலையில், தவறுதலாக குண்டு பாய்ந்ததில் காயமடைந்த இந்தியர் ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் உயிரிழந்துள்ளார்.

டால் குழும நிறுவனத்தில் ஆல்பர்ட் பணியாற்றி வந்த நிலையில், அவரது குடும்பத்தினருடன் அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாகவும், தேவையான ஏற்பாடுகளை செய்து வருவதாகவும் இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments