புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை தொடங்குகிறார் எலான் மஸ்க்..!

0 2358

ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரியும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் -ன் நிறுவனருமான எலோன் மஸ்க் புதிய செயற்கை நுண்ணறிவு நிறுவனத்தை  தொடங்குகிறார்.

அதற்கு X.AI Corp என்று பெயரிடப்பட்டுள்ள து. கடந்த மார்ச் மாதம் 9-ந்தேதி நெவாடவில் இதற்காக நிறுவப்பட்ட AI ஸ்டார்ட்-அப் நிறுவனத்தின இயக்குனராக எலோன் மஸ்க் நியமிக்கப் பட்டார்.

நியூராலிங்க் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாரெட் பிர்ச்சால் செயலராக நியமிக்கப்பட்டார்.

மஸ்க் AI துறையில் தனது திட்டங்களை பகிரங்கப்படுத்தவில்லை என்றாலும் அதற்கான ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மென்பொருள் வடிவமைப்பவர்களை ஒன்றிணைத்து ஆயிரக்கணக்கான உயர் ஆற்றல் கொண்ட GPU செயலிகளை பாதுகாத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments