மருந்து கடை வைத்து நடத்திக்கொண்டு பொதுமக்களுக்கு போலி மருத்துவம் பார்த்த 3 பேர் கைது!

0 4695

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருந்து கடை வைத்து நடத்திக் கொண்டு, அதில் பொதுமக்களுக்கு போலி மருத்துவம் பார்த்த மூன்று பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மருத்துவம் படிக்காமல் சில போலி மருத்துவர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக, கிடைத்த தகவலின் அடிப்படையில் சுகாதாரத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் மாத்தூர் கிராமத்தில் விஜய்,எடுத்தவாய் நத்தம் என்ற கிராமத்தில் ரகுமான் மற்றும் கெடிலம் பகுதியை சேர்ந்த கிருபாநிதி ஆகியோர் படிக்காமல் போலியாக மருத்துவம் பார்த்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து 3 பேரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments