தனியார் பொறியியல் கல்லூரி வகுப்பறையில் ரத்தப்போக்குடன் மாணவி மரணம் அடைந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை..!

0 2318

ஆந்திர மாநிலம் நெல்லூரில் தனியார் பொறியியல் கல்லூரி வகுப்பறையில் ரத்தப்போக்குடன் மாணவி ஒருவர் மரணம் அடைந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த கல்லூரியில்  பி டெக் இரண்டாம் ஆண்டு படித்து வந்த 19 வயது மாணவி ஒருவர் கடந்த 11ம் தேதி வகுப்பறையில் ரத்த போக்குடன் மரணமடைந்த நிலையில் காணப்பட்டார்.

அவர் அருகில் ஆறு மாத கரு ஒன்றும் காணப்பட்டது. இது தொடர்பான புகாரின் பேரில் விரைந்து வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த மாணவிக்கு கருக்கலைப்பு ஏற்பட்டு மரணமடைந்தாரா அல்லது யூடியூப் பார்த்து சொந்தமாக கருக்கலைப்பு செய்து கொள்ளும்போது மரணம் அடைந்து விட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments