புதுமனை புகுவிழாவில் மின்சாரம் பாய்ந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பரிதாபமாக பலி..!

0 4904

திருப்பதி அருகே புதுமனை புகுவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலியாயினர்.

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டத்தில் உள்ள கனுகுமாரிபள்ளி கிராமத்தில் சுப்பாரெட்டி என்பவரின் புது வீடு குடிபுகும் விழாவில் இந்த துயரம் நேரிட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்கள் உணவருந்தி கொண்டிருந்த போது வேகமாக காற்று வீசியதால் சாமியானா பந்தல் சாய்ந்தது. அதன் கீழே இருந்த உறவுக்கார சிறுவன்மீது மின்சாரம் பாய்ந்தது.

சிறுவனை காப்பாற்ற அடுத்தடுத்து முயன்ற உறவினர்கள் 7 பேர் மீதும் மின்சாரம் பாய்ந்தது. இதில் சிறுவனும், அவனது பாட்டியும் அந்த இடத்திலேயே பலியாயினர்.

படுகாயமடைந்த 6 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அதில் இருவர் வழியிலேயே உயிரிழந்தனர். இது தொடர்பாக மதனப்பள்ளி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments