பெண்ணிடம் துப்பாக்கி முனையில் சங்கிலி பறிப்பு..! பைக்கில் வந்து முகமூடி கொள்ளையர்கள் துணிகரம்

0 1583

டெல்லியில் துப்பாக்கி முனையில் பெண் ஒருவரிடம் இருந்து முகமூடி அணிந்த மர்ம நபர்கள் தங்கசங்கிலியை பறித்து சென்றனர்.

ரோகிணி பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த அந்த பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கசங்கிலியை பின்னால் பைக்கில் வந்த இருவர் பிடித்து இழுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பித்து கடை ஒன்றுக்குள் அந்த பெண் ஓட முயன்றார்.

பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு காப்பாற்ற வந்த கடைக்காரர் மர்ம நபர்கள் கையில் துப்பாக்கி வைத்திருந்ததை கண்டதும் தெறித்து உள்ளே ஓடினார். இதையடுத்து, அப்பெண்ணை கடை வாசலிலேயே இழுத்து தள்ளி மர்ம நபர்கள் சங்கிலியை அறுத்து சென்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments