சிஏபிஎஃப் தேர்வை தமிழிலும் எழுதலாம் - அமித் ஷா

0 1532

மத்திய பாதுகாப்பு படைக்கான போலீஸ் தேர்வினை தமிழ் மொழியிலும் எழுதுவதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவித்துள்ளார்.

மத்திய காவல்படைக்கான தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த நிலையில், இத்தேர்வினை தமிழ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட மாநில மொழிகளிலும் எழுதுவதற்கு அனுமதிக்க வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், வரும் 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் சி.ஏ.பி.எஃப் தேர்வை தமிழ் உள்பட 15 மொழிகளில் எழுதலாம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவித்திருப்பதை, முழு மனதுடன் வரவேற்பதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments