அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படும் - துணை வேந்தர் வேல்ராஜ் பேச்சு!

0 1346

அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை ஏற்படுத்தப்படும் என்று துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில்  முதல் மொழி வழங்கும் நாளைய தமிழா என்ற இணைய வழி தமிழ் மாநாடு துவக்கவிழா நடைபெற்றது இதில் அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் பங்கேற்று உரையாற்றினார் அப்போது தமிழ் மொழியின் பெருமையை பிரதமர் உணர்ந்திருப்பதன் காரணமாக , தமிழின் பெருமையை பற்றி தொடர்ந்து பேசி வருகிறார் என்றார்.

அண்ணா பல்கலைக்கழக பாடங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்க்கப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் உலகத்தின் முதல் மொழி தமிழ் மொழி தான் என்றும், தமிழின் பெருமையை முதலில் தமிழர்கள் அறிய வேண்டும் என்றும் அவர் கூறினார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments