500க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய சூப்பர் திருடனை 500 கிலோ மீட்டர் துரத்திச்சென்று பிடித்த டெல்லி போலீசார்!

0 1466

நாடு முழுவதும் 500க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகளில் தொடர்புடைய 'சூப்பர் திருடனை' 500 கிலோ மீட்டர் துரத்திச் சென்று உத்தர பிரதேசத்தில் வைத்து டெல்லி போலீசார் கைது செய்தனர்.

டெல்லியை சேர்ந்த தேவேந்தர் சிங், பள்ளிப் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு தன் 14 வயதில் இருந்தே திருடத் தொடங்கியுள்ளான். சிறு சிறு திருட்டு சம்பவங்களில் ஈடுபடத் துவங்கிய தேவேந்தர்,சென்னை, பெங்களூரு, மும்பை, திருவனந்தபுரம் என பெரிய நகரங்களை குறிவைத்து தொடர் கொள்ளையில் ஈடுபட்டு, போலீஸுக்கு தண்ணிக்காட்டி வந்துள்ளான்.

இந்நிலையில், கேரளாவில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு சிறைத் தண்டனை பெற்று வெளியேவந்த தேவேந்தர் டெல்லியில் மீண்டும் கைவரிசையை காட்டி, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து தப்பினான்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments