அரசு இல்லத்தைக் காலி செய்தார் ராகுல்காந்தி..!
சூரத் நீதிமன்ற உத்தரவால் எம்பி பதவியை இழந்த ராகுல்காந்தி, தாம் குடியிருந்த வீட்டைக் காலி செய்தார்.
மக்களவைச் செயலர் மூலமாக ஏப்ரல் 22ம் தேதிக்குள் அரசு இல்லத்தைக் காலி செய்யுமாறு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், ராகுல் காந்தி 12 துக்ளக் சாலையில் உள்ள இல்லத்தில் இருந்த உடைமைகளைக் காலி செய்து கொடுத்தார். அவரது உடைமைகள் அனைத்தும் சோனியா காந்தி தங்கியுள்ள 10 ஜன்பத் சாலையில் இல்லத்துக்கு கொண்டு செல்லப்பட்டன.
Comments