திகார் சிறைக்குள் கைதிகளிடையே மோதல்.. பிஷ்னோய் கோஷ்டியைச் சேர்ந்த தியோத்தா என்பவன் கத்தியால் குத்திக் கொலை!

0 1041

டெல்லியின் பாதுகாப்பு மிகுந்த திகார் சிறைக்குள் கைதிகளிடையே கடும் மோதல் வெடித்தது. இதில் நிழல் உலக தாதா லாரன்ஸ் பிஷ்னோய் கோஷ்டியைச் சேர்ந்த தியோத்தா என்ற ஒரு ரவுடி ரஹ்மான் என்பவன் தலைமையிலான எதிரிகளால் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டான்.

இந்த மோதலில் ரஹ்மான் உள்பட 4 கைதிகள் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து பிஷ்னோய் கூட்டாளிகள் பழிக்குப் பழி என்று பெரும் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதனால் சிறையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். சிறை வளாகத்தைச் சுற்றியும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments