ராணுவ முகாமில் 4 ராணுவ வீரர்களைக் கொன்று தலைமறைவான 2 கொலையாளிகளைப் பிடிக்க தீவிர முயற்சி!

0 2123

பஞ்சாப் மாநிலம் பதிண்டாவில் உள்ள ராணுவ முகாமில் தூங்கிக் கொண்டிருந்த 4 ராணுவ வீரர்களைக் கொன்று தலைமறைவாகி விட்ட 2 கொலையாளிகளைப் பிடிக்க போலீசார் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ள போதும் பலன் ஏதும் கிடைக்கவில்லை,

அந்த குறிப்பிட்ட முகாமைச் சேர்ந்த அனைத்து ராணுவ வீரர்களிடமும் கொலையாளிகள் பற்றிய தகவல்கள் கிடைக்குமா என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. வேறு வீரர்கள் யாரும் காணவில்லையா என்பதும் சரிபார்க்கப்பட்டது.

இதனிடையே மற்றொரு ராணுவ வீரர் தற்கொலை செய்துக் கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இல்லை என்று போலீசார் நம்புகின்றனர். தீவிரவாதத் தாக்குதல் என்ற கோணத்திலும் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments